செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்

"தொன்தமிழ் வேர் தாங்கும் விழுதுகள் இவர்கள் "

“தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும்
வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக்
கொள்ளும் வகையிலும், “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்க்கவிஞர்கள்

'உவமைக் கவிஞர்' சுரதா (1921 - 2006)

 

  • பாவேந்தர் மீது கொண்ட பற்று காரணமாக தன் பெயரை ‘சுப்புரத்தின தாசன்’ என மாற்றிக் கொள்ள பின் சுருக்க பெயராக ‘சுரதா’ ஆனது.
  • கவிஞர்,இதழாசிரியர்,திரைப்பட பாடலாசிரியர், நாடக நடிகர் என தமிழோடு இயங்கியவர்.
  • செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர். 
  • உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையைத் தொடங்கியவர். முதன் முதலாக கவிதையிலேயே வார இதழ் நடத்திய பெருமைக்கு உரியவர். 
  • தமிழக அரசு ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவித்துள்ளது. 

இவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது.

19 February, 2024


சுத்தானந்த பாரதியார் (1897-1990)

சுத்தானந்த பாரதியார் (மே 11, 1897 - மார்ச் 7, 1990) கவியோகிமகரிஷி என்று போற்றப்பட்டவர் ஆவார். இவர் கவிதைகள்தமிழிசைப் பாடல்கள்உரைநடை நூல்கள்மேடை நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவராவார்.

19 February, 2024


கவிமணி-தேசிக-விநாயகம் (1876 - 1954)

கவிஞர், கல்வெட்டாய்வாளர், தமிழறிஞர்

பிறப்பு                    : 27.07.1876(தேருர், கன்னியாகுமரி மாவட்டம்)

மறைவு                   : 11.08.1954 (புத்தேரி,கன்னியாகுமரி மாவட்டம்) 

ஆசிரியராக நாகர்கோவிலும் திருவனந்தபுரத்திலும் பணிபுரிந்தவர். தமிழும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

 

முக்கிய நூல்கள்

கவிதை

மலரும் மாலையும்

ஆசிய ஜோதி

உமர்கயாம் பாடல்கள்

நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்

 

உரைநடை

கவிமணியின் உரைமணிகள்

                                           

ஆதாரம்: தமிழறிஞர்கள்(2018/2022): அ.கா.பெருமாள். காலச்சுவடு பதிப்பகம்

19 February, 2024


நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் (1888 - 1972)

 

  • காந்தியடிகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நாட்டுப் பற்றைப் பாடல்கள் வழியே பரப்பியவர். நல்ல எழுத்தாளர்; சிறந்த பேச்சாளர், உயர்ந்த செயல்வீரர்.
  • 1949 ஆம் ஆண்டு தமிழக அரசின் ”அரசவைக் கவிஞராக” நியமிக்கப்பட்டவர்.
  • நடத்திய இதழ்

தமிழ் ஹரிஜன்

  • நூல்கள்
  • என் கதை – வாழ்க்கை வரலாறு
  • மலைக்கள்ளன்

 திருக்குறள் புது உரை

 சங்கொலி

காந்தி அஞ்சலி

தமிழ்த் தேன்.

விருது

  • பத்மபூஷன் (1971)

19 February, 2024


மகாகவி சுப்ரமணிய பாரதியார் (1882 - 1921)

  • பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
  • தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர்
  • எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்
  • பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.

 

19 February, 2024


பாவேந்தர் பாரதிதாசன் (1891 - 1964)

  • இவர் தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர். 
  • ‘கனகசுப்புரத்தினம்’ இயற்பெயரைப் பாரதியார் மீது கொண்ட தீராத பற்றால் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டவர். 
  • பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர்.
  • தமிழ்நாடு அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது.
  • 1970ல் ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.

 

பாவேந்தர் பாரதிதாசன்

(1891 - 1964)

கவிஞர், எழுத்தாளர்

பிறப்பு: 29.04.1891

மறைவு: 21.04.1964

இடம்: புதுவை

இயற்பெயர்: சுப்புரத்தினம்

பெற்றோர்: கனகசபை, இலக்குமி.

மனைவி: பழனியம்மை

சுப்புரத்தினம் என்னும் இயற்பெயரைப் பாரதியார் மீது கொண்ட தீராத பற்றால் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டவர். திராவிடச் சிந்தனையையும் பகுத்தறிவுக் கருத்துகளையும் பெண்விடுதலையையும் தமது பாடல்கள் வழியே வெளிப்படுத்தியவர்.

இதழ்கள்: ஆத்மசக்தி, டூப்ளேக்ஸ், தாய்நாடு, புதுவை முரசு, குயில், முல்லை

படைப்பு:

சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

புரட்சிக்கவி, பாரதிதாசன் கவிதைகள்

எதிர்பாராத முத்தம், தமிழச்சியின் கத்தி

இசையமுது, காதலா? கடமையா?

குடும்ப விளக்கு

இருண்ட வீடு

அழகின் சிரிப்பு

பாண்டியன் பரிசு

19 February, 2024


மு.மேத்தா (1945)

பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர்

பிறப்பு: 1945

இடம்: பெரியகுளம் 

காதலின் மோகமும் தமிழின் தாகமும் என்னைக் கவிதை எழுதத் தூண்டின என்று சொல்லும் மேத்தா கல்லூரிப் பேராசிரியர். இவரது கவிதைகளில் மனிதரிடையேயான அன்பும் மத நல்லிணக்கமும் சாரமிகு சாறாக நிறைந்திருக்கும். 

படைப்பு:

  • கண்ணீர்ப் பூக்கள்
  • ஊர்வலம்
  • அவளும் நட்சத்திரம் தாம்
  • சோழநிலா
  • வெளிச்சம் வெளியே இல்லை
  • நந்தவன நாட்கள்
  • ஒரு வானம் ஒரு சிறகு
  • நதிகள் நனைவதில்லை
  • மகுடநிலா

19 February, 2024


இன்குலாப் (1944 - 2016)

 

  • கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர்,பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முகம் கொண்டவர்.  
  • உருவாக்கிய படைப்புகள் சில

விடியல் கீதங்கள்

நாங்க மனுஷங்கடா

கிழக்குப் பின்தொடரும் 

இன்குலாப் கவிதைகள் 

இன்குலாப் நாடகங்கள்

 

  • விருதுகள்

 சிற்பி இலக்கிய விருது

 கலைமாமணி விருது

19 February, 2024


மீ.ராஜேந்திரன் (மீரா) (1938 - 2002)

  • தமிழ்ப் புதுக்கவிஞரான மீரா அன்னம் - அகரம் பதிப்பகத்தை நிறுவியவர். 
  • தமிழ்நவீன இலக்கியத்துக்கு பெரும் பங்களிப்பை அளித்துள்ளது.
  •  வானம்பாடி இயக்கக் கவிஞர்களில் முக்கியமானவர் மீரா.
  • இதழ்கள்

 கவி

 அன்னம் விடு தூது

  • உருவாக்கிய படைப்புகளில் சில

மண்ணியல் சிறுதேர் - ஒரு மதிப்பீடு

 கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்

ஊசிகள்

 எதிர்காலத் தமிழ்க்கவிதை

மீரா கட்டுரைகள்

முகவரிகள்

19 February, 2024


Page 13 of 20, showing 9 record(s) out of 177 total