தந்தை பெரியார் (ஈ.வெ.இராமசாமி) (1879 - 1973)
நவீனச் சிந்தனையாளர்
பிறப்பு: 17.09.1879
மறைவு: 24.12.1973
இடம்: ஈரோடு
பெற்றோர்: வெங்கடப்பர், சின்னத்தாயம்மை
இயற்பெயர்: ஈ.வெ.இராமசாமி
மனைவி: நாகம்மை, மணியம்மை
தமிழின் நவீனச் சிந்தனையாளர்; பத்திரிகை ஆசிரியர்; தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கண்டவர், ஒடுக்கப்பட்டோருக்காகவும் பெண்ணுரிமைக்காகவும் தொடர்ந்து குரல்கொடுத்தவர்; களப்பணி ஆற்றியவர். திராவிட இயக்கச் சிந்தனையையும் பகுத்தறிவுக் கருத்துகளையும் பரவலாக்கியவர்.
இதழ்கள்:
குடியரசு, திராவிடன், ரிவோல்ட் (ஆங்கிலம்), புரட்சி, பகுத்தறிவு, விடுதலை
நூல்கள்:
தந்தை பெரியார் முழு முதல் வாழ்க்கை வரலாறு
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்
போராட்டங்கள்:
கள்ளுக்கடை மறியல் போராட்டம் (1921)
வைக்கம் போராட்டம் (1924)
சேரன்மகாதேவி குருகுலப் போராட்டம் (1924)
இந்தி எதிர்ப்புப் போராட்டம் (1937)
கோயில் நுழைவுப் போராட்டம்
குலக் கல்வி எதிர்ப்புப் போராட்டம் (1952)
அரசியல் சட்ட எதிர்ப்புப் போராட்டம்
இயக்கம்:
திராவிடர் கழகம்
சிறப்புப் பெயர்:
பெரியார்
வைக்கம் வீரர்
என் கருத்துகள் பாராட்டப்படுகிறதா? அல்லது புறக்கணிக்கப்படுகிறதா? உயர்வாகக் கருதப்படுகிறதா? அல்லது இழிவாகக் கருதப்படுகிறதா என்பதைக் குறித்து நான் கவலைப்படாமல், என் கருத்துகள் மற்றவர்களுக்கு எவ்வளவு கசப்பாக இருந்தாலும், உண்மையை எடுத்துரைப்பதுதான் என் வாழ்க்கையில் இலட்சியம்.
- தந்தை பெரியார்.