செந்தமிழ்சிற்பிகள்

"தொன்தமிழ் வேர் தாங்கும் விழுதுகள் இவர்கள் "

“தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும்
வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக்
கொள்ளும் வகையிலும், “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

39 செய்குதம்பி பாவலர் (1874)

 

செய்குதம்பி பாவலர்

(1874 - 1950)

 

  • தசாவதானி பட்டம் பெற்றவர்.
  •  'அருட்பா மருட்பா' போரில் வள்ளலார் சார்பாக வாதாடியவர். 
  • திருநாகூர்த் திரிபந்தாதி உள்ளிட்ட பல சிற்றிலக்கிய நூல்களையும் சீறாப்புராணப் பொழிப்புரை உள்ளிட்ட பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்.

 

 

09 December, 2023


40 சா.ஞானப்பிரகாசர் (1875)

சா.ஞானப்பிரகாசர்

(1875 - 1947)

 

  • நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்தியம்பியவர்களுள் ஒருவர். இலத்தின், கிரேக்கம் முதலாய பதினெண் மொழிகளில் எழுதவும், பேசவும் வல்லவராய் இருந்தார்
  • இவர் பல தமிழ் நூல்களின் ஆசிரியர்

சுவாமி ஞானப்பிரகாசருக்கு மதிப்பளிக்குமுகமாக இலங்கை அரசு அவரது படத்துடன் கூடிய அஞ்சல் முத்திரை ஒன்றும், சிறப்பு முதல் நாள் உறை ஒன்றையும் 1981 மே 22 இல் வெளியிட்டது.

09 December, 2023


36 அ.மாதவையா (1872)

     அ.மாதவையா

(1872 - 1925)

  • இதழியல், கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, பெண் முன்னேற்றம், இசை, வாழ்க்கை வரலாறு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர்.அச்சேறும் பழந்தமிழ் நூல்களின் இலக்கிய நயத்தை பொது வாசகர்களுக்கு புரியும்படியாக எழுதும் உரைமரபை தொடங்கியவர்களில் ஒருவர்.
  • சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக செய்யப்பட்டவர்.
  • தமிழைக் கட்டாயப் பாடமாக இளங்கலைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்.

08 December, 2023


42 கா.நமசிவாயனார் (1876)

கா.நமசிவாயனார்

(1876 - 1936)

  • நமச்சிவாயர் திருத்தணிகை முருகன் பக்தர். மாதந்தோறும் கிருத்திகையன்று திருத்தணிகை சென்று தணிகைவேலனை வழிபடும் வழக்கம் கொண்டவர்.
  • பெண்களுக்கென அரசினரால் இராணி மேரிக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டபோது அங்கு தமிழ்ப் பண்டிதராக பணிபுரிந்தார்.
  • மாணவர்கள் தமிழ் இலக்கணத்தை விரும்பி கற்கும் வகையில்தமிழ்ச் சிற்றிலக்கணம்எனும் அரிய நூலை எழுதி வெளியிட்டார்
  • தை முதல் நாளைத் தமிழ்த் திருநாளாகக் கொண்டாட வழி செய்தார்

 

09 December, 2023


43 - 'கவிமணி' தேசிக விநாயகம் (1876)

'கவிமணி' தேசிக விநாயகம்

(1876 - 1954)

கவிஞர், கல்வெட்டாய்வாளர், தமிழறிஞர்

பிறப்பு                    : 27.07.1876(தேருர், கன்னியாகுமரி மாவட்டம்)

மறைவு                   : 11.08.1954 (புத்தேரி,கன்னியாகுமரி மாவட்டம்) 

ஆசிரியராக நாகர்கோவிலும் திருவனந்தபுரத்திலும் பணிபுரிந்தவர். தமிழும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

 

முக்கிய நூல்கள்

கவிதை

மலரும் மாலையும்

ஆசிய ஜோதி

உமர்கயாம் பாடல்கள்

நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்

 

உரைநடை

கவிமணியின் உரைமணிகள்

                                           

ஆதாரம்: தமிழறிஞர்கள்(2018/2022): அ.கா.பெருமாள். காலச்சுவடு பதிப்பகம்

09 December, 2023


68. விபுலானந்த அடிகள்_1892

விபுலானந்த அடிகள் (1892-1947)

  • தமிழிசையில் இவரது 14-ஆண்டுகால ஆய்வின் முடிவாக உருவான   'யாழ்நூல் ' மூலம் தமிழிசையின் தொன்மையையும் ஆழத்தையும் நிறுவியவர்.
  • மதுரை தமிழ்ச் சங்கத்தில் இவராற்றிய 'ஷேக்ஸ்பியரும் தமிழ் நாடகங்களும்' என்ற சொற்பொழிவு  உ.வே.சாமிநாதையரால் பாராட்டப்பெற்றது.
  • தமிழில் அறிவியல் இல்லை என்ற குறையை தீர்க்க 1934-ல் உருவான "சொல்லாக்கக் கழக'த்தின் தலைமையை ஏற்றுச் செயல்பட்டவர்.

08 December, 2023


67. மயிலை சிவமுத்து_1892

மயிலை சிவமுத்து (1892-1968)

  • தமிழறிஞர், எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர்.
  • தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் துறைகளில் களப்பணியாற்றினார்.
  • இந்து சமய வரலாற்றாய்வாளர்கள் அதிகம் கவனம் செலுத்தாத சமண, புத்த சமயக் கோயில்களையும் தொல்லியல் களங்களையும் ஆய்வு செய்தார்.
  • கிறித்துவமும் தமிழும், பெளத்தமும் தமிழும், சமணமும் தமிழும், தமிழர் வளர்த்த அழகுக்கலைகள், களப்பிரர் ஆட்சியில் தமிழகம் உள்ளிட்ட நூல்களை இயற்றியுள்ளார்.

மாணவர் மன்றத்திற்கென சொந்தக் கட்டிடம் கட்டினார். 1963ஆம் ஆண்டில் தொடக்கப்பள்ளி ஒன்றைத் தொடங்கி நடத்தினார்.

08 December, 2023


65. சர்.ஆர்.கே.சண்முகனார்_1892

சர்.ஆர்.கே.சண்முகனார் (1892 - 1953)

  • இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசின் முதல் நிதியமைச்சர், இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர்.
  • "வசந்தம்' என்ற இலக்கிய மாத இதழ் பதிப்பாசிரியராகவும் இருந்தார்.
  • பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகிய அமைப்புகளைத் தோற்றுவிக்க இவர் ஆற்றிய பணிகள் பல
  • தமிழ் இசை இயக்கத்தைத் தோற்றுவித்தார்
  • இந்தியாவிலும், ஆசியக் கண்டத்திலும் மிகப் பெரிய தேசிய செய்தித்தாள் மற்றும் காகித ஆலையின் செயல் தலைவராக இந்திய அரசால் நியமிக்கப்பட்டார்.

 

08 December, 2023


60. வ.ராமசாமி_1889

வ.ராமசாமி (1889 - 1951)

எழுத்தாளரும், இதழாசிரியரும், தமிழறிஞரும், தமிழ் வசனநடையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர்.

தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், விதவைத் திருமணம், பெண்கல்வி போன்ற புதினங்களில் எழுதினார்.

1944 ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் நூல் பிரசுரமானது. பாரதியாரின் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை உரைக்கிறது

இவர் எழுதியவை நான்கு நாவல்கள், ஐந்து வாழ்க்கை வரலாறு, ஆறு சிந்தனை, இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் என மொத்தம் பதினேழு ஆகும். . ரா வின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

 

08 December, 2023


Page 1 of 21, showing 9 record(s) out of 182 total