பூமணி (1947)

பூமணி

(1947)

 

அறிமுகம்

பூமணி (பிறப்பு- 1947, இயற்பெயர் - பூ. மாணிக்கவாசகம்.) இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி எனும் ஊரில் பிறந்தார். இவரின் தந்தை பூலித்துரை, தாய் தேனம்மை. பூமணி இவர், தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய எழுத்தாளர். இவருடைய கல்லூரிக் காலத்தில் இவருக்கு விமர்சகர் சி. கனகசபாபதி ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பூமணியை சிறுகதைகள் எழுத ஊக்குவித்தார். அதன் பிறகு தாமரை ஆசிரியராக இருந்த தி. க. சிவசங்கரன் பூமணியை ஊக்குவித்தார்.

சிறுகதைத் தொகுப்பு

  • வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள், நல்லநாள்,

புதினங்கள்

திரைப்படம்

சிறப்புகள்

  • தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக இவர் இயக்கிய கருவேலம்பூக்கள் திரைப்படம் பல முக்கிய உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது.
  • வெக்கை நாவல் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

விருதுகள்

  • இலக்கியச் சிந்தனை பரிசு
  • அக்னி விருது
  • திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது
  • இலக்கியத்துக்கான பங்களிப்புக்காக 2011க்கான விஷ்ணுபுரம் விருது

அஞ்ஞாடி புதினத்திற்கு 2014இல் சாகித்திய அகாதமி விருது