ஜி.திலகவதி (1951)

ஜி.திலகவதி

(1951)

 

அறிமுகம்

ஜி.திலகவதி (பிறப்பு:1951) தமிழக காவல்துறையின் முதல் தமிழ்ப்பெண் தலைமை இயக்குனர். தமிழ் எழுத்தாளர். திலகவதி தர்மபுரி குமாரசாமி பேட்டையில் வாழ்ந்த இணையர்களான கோவிந்தசாமி ரெட்டியாருக்கும் அவர் மனைவிக்கும் 1951ஆம் ஆண்டில் பிறந்தவர். இவரின் தந்தையார் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்; தாயார் அரசுப் பள்ளி ஆசிரியர்.

திலகவதி தன்னுடைய பள்ளிக் கல்வியை தர்மபுரியில் பெற்றார். வேலூர் ஆக்சீலியம் கல்லூரியில் பொருளாதாரத்தில் கலை இளவர் பட்டம் பெற்றார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பயின்று பொருளாதாரத்தில் கலை முதுவர் பட்டம் பெற்றார். பின்னர் தமிழ்நாடு பிற்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஒன்றியப் பொதுப் பணியாளர் தேர்விற்கான பயிற்சி நடுவத்தில் (UPSC Civil Service coaching centre, run by Department of Backward Development) சேர்ந்து ஓராண்டு பயிற்சி பெற்றார். அத்தேர்வில் வெற்றிபெற்று தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வானார். சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார்.   திலகவதி தமிழ்நாட்டிலிருந்து இந்தியக் காவல் பணிக்குத் தேர்வான முதல் தமிழ்ப்பெண் ஆவார். இவர் 1976 ஆம் ஆண்டில் தமிழகக் காவல்துறையில் பணியில் சேர்ந்தார். 34 ஆண்டுகள் அத்துறையில் பல்வேறு பிரிவுகளில் பின்வரும் பதவிகளை வகித்துள்ளார்:

  • காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (Assistant Superintendent of Police - ASP 1976 - )
  • காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of Police - SP)
  • காவல்துறை உதவித் தலைவர் (Deputy Inspector General of Police - DIG 1993-?)
  • காவல்துறைத் தலைவர் (Inspector General of Police - IG)
  • காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (Additional Director General of Police - ADGP 2007[7] - 2010)
  • காவல்துறை தலைமை இயக்குநர் (Director General of Police - DGP 2010. 2011)

காவல்துறை தலைமை இயக்குநர் பதவியை அடைந்த முதல் தமிழ்ப்பெண் இவரே. தமிழகத்தில் இப்பதவியை அடைந்த இரண்டாவது பெண் இவர் ஆவார். காவல்துறை தலைமை இயக்குநர் தகுதியில் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராகப் பணியாற்றிய திலகவதி 2011 மார்ச் 31 ஆம் நாள் அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.

பிற பொறுப்புகள்

  1. மகளிர்நல ஆணைய உறுப்பினர்
  2. சாகித்ய அகாதமி உறுப்பினர்

கட்டுரைகள்

  1. முடிவெடு
  2. வேர்கள் விழுதுகள்
  3. சமதர்மப் பெண்ணியம்
  4. மானுட மகத்துவங்கள்

சிறுகதைகள்

திலகவதியின் முதல் சிறுகதை - உதைத்தாலும் ஆண்மக்கள் - 1987ஆம் ஆண்டில் தினகரன் இதழில் வெளிவந்தது.

  1. தேயுமோ சூரியன்
  2. அரசிகள் அழுவதில்லை

நாவல்கள்

  1. இனிமேல் விடியும் (மாலைமதி; 2-3-1989; மதி: 15 மாலை:18)
  2. உனக்காகவா நான்; அம்ருதா பதிப்பகம், சென்னை; 2007.
  3. ஒரு ஆத்மாவின் டயரி சில வரங்கள்
  4. கண்திறந்திட வேண்டும்; 1996 கலைமகளில் வெளிவந்த தொடர்
  5. கல்மரம் (சாகித்ய அகாதெமி விருது பெற்றது); அம்ருதா பதிப்பகம், சென்னை; 2005.
  6. கனவைச் சூடிய நட்சத்திரம்; 2001
  7. கைக்குள் வானம்
  8. சொப்பன பூமியில்; அம்ருதா பதிப்பகம், சென்னை; மு.பதி. 1998;இ.பதி 1998.
  9. தமிழ்க்கொடியின் காதல்; அம்ருதா பதிப்பகம், சென்னை; 2007.
  10. தீக்குக் கனல் தந்த தேவி
  11. திலகவதி நாவல்கள் 1 & 2(தொகுப்பு); புதுமைப்பித்தன் பதிப்பகம்; 2004
  12. நேசத்துணை; அம்ருதா பதிப்பகம், சென்னை; 2007.
  13. பத்தினிப்பெண் (1983ஆம் ஆண்டில் திரைப்படமாக உருவானது)

 கவிதை

  1. அலை புரளும் கரையோரம்

வானொலி உரைகள்

  1. காலந்தோறும் அறம்

தொகுத்தவை

  1. தொப்புள்கொடி (சிறுகதைகள்)
  2. மரப்பாலம் (தென்கிழக்காசியச் சிறுகதைகள்)



மொழிபெயர்ப்பு

  1. அன்புள்ள பிலாத்துவுக்கு - பால் சக்காரியா
  2. இத்வா முண்டாவுக்கு வெற்றி - மகாசுவேதா தேவி (நேஷனல் புக் டிரஸ்ட்)
  3. உதிரும் இலைகளின் ஓசை (உருது சிறுகதைகள்) - குர்ரத்துலைன் ஹைதர் (சாகித்திய அகாதெமி)
  4. போலுவும் கோலுவும் - பங்கஜ் பிஷ்ட் (நேஷனல் புக் டிரஸ்ட்)

ஆய்வுகள்

திலகவதியின் படைப்புகளைச் சிலர் இளம்முனைவர் பட்டத்திற்கும் முனைவர் பட்டத்திற்கும் ஆய்வுசெய்துள்ளனர். அவற்றுள் சில:

  • திலகவதி புதினங்களில் பெண்கள் (முனைவர் பட்ட ஆய்வேடு); இராசு, நி; சி.பி.எம்.கல்லூரி, கோயம்புத்தூர்; 1998
  • திலகவதி நாவல்களில் பாத்திரப்படைப்பு (முனைவர் பட்ட ஆய்வேடு), பியூலஜா தி க; 2017; மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
  • திலகவதி நாவல்கள் ஒரு பெண்ணியப் பார்வை (இளம்முனைவர் பட்ட ஆய்வேடு); இ. உமாமகேஸ்வரி; புதுவைப் பல்கலைக்கழகம்; 2000.
  • திலகவதி நாவல்களில் பெண் சித்திரிப்பு (முனைவர் பட்ட ஆய்வேடு); எஸ். ஆஞ்சல் ஜெயலட் ராணி; அருள் பதிப்பகம், சென்னை;
  • திலகவதியின் நாவல்களில் சமுதாயக் கருத்துகள் (இளம்முனைவர் பட்ட ஆய்வேடு); டோலி; ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி, நாகர்கோவில்.
  • திலகவதியின் 'தேவை ஒரு தேவதைக்கதை'யில் சமுதாயச் சிந்தனைகள் (கலைமுதுவர் பட்ட ஆய்வேடு); தீபலட்சுமி; தெ.தி.இந்துகல்லூரி, நாகர்கோவில்.
  • திலகவதி நாவல்களில் சமூதாயச் சிக்கல்களும் தீர்வுகளும்; கோ. தனலட்சுமி; ஸ்ரீ. கா. சு. சு. கலைக் கல்லூரி, திருப்பனந்தாள்.

விருதுகள்

  • சாகித்ய அகாதமி விருது
  • தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (2020)