அம்பை (1944)

அம்பை 

(1944)

 

அறிமுகம்

 

அம்பை (நவம்பர் 17, 1944) அம்பை தமிழில் சிறுகதைகளும், ஆய்வுக்கட்டுரைகளும் எழுதும் எழுத்தாளர். தமிழில் பெண்ணியம் சார்ந்து எழுதிய முதன்மைப் படைப்பாளி என விமர்சகர்களால் கருதப்படுபவர். பெண்ணியக் களச்செயல்பாட்டாளர். சமூகவியல் ஆய்வாளர். ஆங்கிலத்தில் C.S.Laksmi என்னும் இயற்பெயரில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவர். 1960களின் பிற்பகுதியில் எழுதத் ​தொடங்கியவர். காதல், திருமணம், அரசியல், இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர். தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் ​பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன.

இவர் ”SPARROW” (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லிதி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி வருகிறார். 1976இல் விஷ்ணுவைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்தார். பொருளாதாரக் காரணங்கள் மட்டுமின்றி படைப்பு, மற்றும் தான் தேர்ந்தெடுத்த சமூகப் பணிகளுக்குக் குழந்தைகளை உள்ளடக்கிய குடும்ப அமைப்பு தடையாக இருக்கும் என்பது அவரது கருத்தாக இருந்தது. வரலாற்றில் எம்.ஏ பட்டமும் அமெரிக்கன் ஸ்டடிஸில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ்ஆங்கிலம்இந்தி மற்றும் கன்னடத்தில் புலமை பெற்றவர். தங்கராஜ் எங்கேசிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். முதல் அத்தியாயம்என்ற சிறுகதையைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார்.

 

நூல்கள்

அந்தி மாலை (நாவல்), ஒரு கறுப்புச் சிலந்தியுடன் (1988), அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு (2014), சிறகுகள் முறியும் (1976) - (முதலாவது தொகுதி - ஓர் பெண்ணின் வாழ்வில் ஏற்படும் பலவிதமான சம்பவங்களை சம்பிரதாயங்களை பேசும் கதைகள்), வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை (1988), காட்டில் ஒரு மான் (2000), சக்கர நாற்காலி, ஸஞ்சாரி, தண்ணியடிக்க, வற்றும் ஏரியின் மீன்கள் (2007), பயணப்படாத பாதைகள் (ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத்துறைகளில் ஈடுபட்ட பெண்களின் வாய்மொழி வரலாற்றுப்பதிவு), சொல்லாத கதைகள் (சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றிய பெண்கள், தலித்எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப்பதிவு)

 

ஆங்கில மொழிபெயர்ப்பில்

  • A Purple Sea (1992), In a Forest, A Deer (2006), The Face Behind the Mask of Women in Tamil literature and Society and Women Writers (1984) - (ஆராய்ச்சி நூல்), Fragrance of Peace(இரோம் சர்மிளா)- தமிழில் "அமைதியின் நறுமணம்" (2010)

 

சாகித்திய அகாதமி விருது

இவர் எழுதிய சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை என்ற சிறுகதை நூலுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டது.