தொ.மு.சிதம்பர ரகுநாதன் (1923 – 2001)
கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
இடம்: திருநெல்வேலி
பெற்றோர்: தொண்டைமான் முத்தையா, முத்தம்மாள்
பொதுவுடைமைவாதியான தொ.மு.சி. ரகுநாதன், டி.கே.சி.யின் வட்டத்தொட்டி இலக்கிய குழாமைச் சேர்ந்தவர். 'தொ.மு.சி’என்று அறியப்பட்டார். சோஷியலிச யதார்த்தவாத எழுத்தாளர், இதழாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், ஆய்வாளர், விமர்சகர் எனப் பன்முகத் திறமை கொண்டவர்.
இதழ்கள்: தினமணி, முல்லை, சக்தி, சாந்தி, சோவியத் நாடு.
படைப்பு:
பஞ்சும் பசியும்
கன்னிகா
புயல்
கங்கையும் காவிரியும்
பாரதி காலமும் கருத்தும்
பாரதியும் ஷெல்லியும்
புதுமைப்பித்தன் வரலாறு
விருது: சாகித்திய அகாதெமி.