செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்

"தொன்தமிழ் வேர் தாங்கும் விழுதுகள் இவர்கள் "

“தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும்
வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக்
கொள்ளும் வகையிலும், “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

நாவலாசிரியர்கள்

சா.கந்தசாமி (1940 - 2020)  

பிறப்பு      : 1940 (மயிலாடுதுறை)

மறைவு     : 31.07.2020

பெற்றோர்  :

மனைவி   :

மக்கள்      :

 

  •         சிறுகதை, நாவல் எனப் புனைவிலக்கியத்தில் செயல்பட்டவர்.
  •         தமிழக அரசின் லலித் கலா அகாதமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணியைப் பாராட்டும் வகையில் 1995–இல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி ஊதியம் வழங்கியது.

 

முக்கிய நூல்கள்:

 

சாயாவனம்

அவன் ஆனது

தக்கையின் மீது நான்கு கண்கள்

விசாரணைக் கமிஷன் (சாகித்ய அகாடமி விருது)




19 February, 2024


பொன்னீலன் (1940)

 

எழுத்தாளர்

பிறப்பு: 15.12.1940

பொன்னீலன் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கல்வித் துறையில் பணியாற்றியவர். இடது சாரி இயக்கப் பற்றாளர். இடது சாரி இயக்கத்தின் கலை இலக்கியப் பெருமன்றத்தில் தலைவராகப் பொறுப்புவகித்தவர். நா.வானமாமலையின் மாணவர். தி.க.சியின் அறிமுகத்தால் கதைகள் எழுதத் தொடங்கினார். சோசலிச யதார்த்தவாத இலக்கியத்தில் நம்பிக்கை கொண்ட எழுத்தாளர் இவர். ஐம்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டு முற்போக்கு இலக்கியத்தின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவராகச் செயல்பட்டவர்.  

படைப்பு:

கரிசல்

ஊற்றில் மலர்ந்தது

புதிய தரிசனங்கள் (சாகித்திய அகாதெமி விருது பெற்றது)

மறுபக்கம்

இடம் மாறிவந்த வேர்கள்

உறவுகள்

தாய்மொழிக் கல்வி

தெற்கிலிருந்து

தமிழ் நாவல்கள்

வைகுந்தர் காட்டும் வாழ்க்கை நெறி

இந்திய இலக்கியச் சிற்பிகள்: தொ.மு.சி.ரகுநாதன்

19 February, 2024


டி செல்வராஜ் (1938 - 2019)

வழக்கறிஞர், எழுத்தாளர்

பிறப்பு: 14.01.1938

மறைவு: 20.12.2019

கல்லூரியில் பயிலும் காலத்திலேயே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் தொடர்பில் இருந்தவர். இடதுசாரி இலக்கியவாதிகள் தொடர்பால் ரஷ்ய இலக்கியங்களை வாசித்து அதனால் ஈர்க்கப்பட்டு சிறுகதைகள் எழுதத் தொடங்கியவர். ஜனசக்தி, சாந்தி ஆகிய இதழ்களில் எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், நாவல்களையும், நாடகங்களையும், பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தொழிலாளர் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு எழுதியுள்ளார்.

படைப்பு:

மலரும் சருகும்

தேநீர்

தோல் (சாகித்திய அகாதெமி விருது பெற்றது)

நோன்பு

டி.செல்வராஜ் கதைகள்

19 February, 2024


நீலபத்மநாபன் (1938)

 பிறப்பு      : 26.04.1938 (இரணியல், கன்னியாகுமரி)

பெற்றோர்  : நீலகண்டப்பிள்ளை, ஜானகி அம்மாள்

மனைவி   : கிருஷ்ணம்மாள்

மக்கள்      : ஜானகி, உமா, கவிதா, நீலகண்டன்

 

  •         சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், மொழியாக்கம், திறனாய்வு, தொகுப்பு ஆகிய வடிவங்களில் செயல்பட்டவர்.
  •         திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தில் பங்களித்திருக்கிறார்.
  •         தமிழ்நாடு அரசு விருது, ராஜா அண்ணாமலைச் செட்டியார் பரிசு, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

 

முக்கிய நூல்கள்:

 

தலைமுறைகள்

பள்ளிகொண்டபுரம்

இலை உதிர் காலம் (சாகித்ய அகாடமி விருது)

நீல. பத்மநாபன் கதைகள்

19 February, 2024


ஆ மாதவன் (1934 - 2021)

 

பெற்றோர்  : ஆவுடைநாயகம், செல்லம்மாள்

மனைவி   : சாந்தா (எ) சூர்ய குமாரி

மக்கள்      : கலைச்செல்வி, மலர்ச்செல்வி, கோவிந்தராஜன்

 

  •         தன்னுடைய அன்றாடத்தின் பகுதியாக இருந்த கடைத்தெருவின் வாழ்க்கையைப் படைப்புகளுக்குள் கொண்டுவந்ததால் கடைத்தெருவின் கதைசொல்லி என்று பாராட்டப்பட்டவர்.
  •         ‘கேரளத்தமிழ்’ இதழாசிரியர். ‘தீபம்’ இதழின் ஆசிரியர் குழுவிலும் அங்கம்வகித்தார்.
  •         திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தை தொடங்கியவர்களில் ஒருவர்.
  •         தமிழக அரசின் இயல் துறைக்கான கலைமாமணி விருது, மொழிபெயர்ப்புகளுக்காக உள்ளூர் பரமேஸ்வர அய்யர் நினைவுப் பரிசு, கன்னியாகுமரி மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கிய தமிழ் மாமணி பட்டம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

 முக்கிய நூல்கள்:

 கடைத்தெருக் கதைகள் (1974)

புனலும் மணலும் (1974)

கிருஷ்ணப்பருந்து (1982)

இலக்கியச் சுவடுகள் (2015) (சாகித்ய அகாடமி விருது)

19 February, 2024


ஜெயகாந்தன் (1934 - 2015)

பிறப்பு      : 24.04.1934 (மஞ்சக்குப்பம், கடலூர்)

மறைவு     : 08.04.2015 (சென்னை)

பெற்றோர்  : தண்டபாணிப் பிள்ளை, மகாலெட்சுமி அம்மாள்

மனைவி   : ஞானாம்பிகை, கௌசல்யா (எ) சீதாலட்சுமி

மக்கள்      : ஜெயசிம்மன், தீபலட்சுமி

இயற்பெயர் : முருகேசன்

 

  •         கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளில் தீவிரமாகப் பங்காற்றியவர். சென்னை தியாகராய நகர் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடவும் செய்திருக்கிறார்.
  •         சிறுகதை, நாவல், கட்டுரை, திரைப்படம், ஆன்மிகம், இதழியல், தன்வரலாறு, மொழியாக்கம் ஆகிய தளங்களில் செயல்பட்டவர்.
  •         இந்திய சோவியத் ரஷிய நட்புறவு விருது, தமிழக அரசு விருது, ஞானபீடம் விருது, பத்மபூஷன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

 

முக்கிய நூல்கள்:

 

ஜெயகாந்தன் சிறுகதைகள்

சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்ய அகாடமி விருது)

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

சினிமாவுக்குப் போன சித்தாளு

ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்

19 February, 2024


சுந்தர ராமசாமி (1933 - 1982)

  • இதழியல், கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு, நினைவோடைகள், பதிப்பு, அரசியல் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • சிற்றிதழ் இயக்க ஆர்வலர். நவீனத்தமிழிலக்கியத்தில் அழகியல் சார்ந்த இலக்கியப் பார்வையை முன்வைக்கும் சிந்தனை மரபாளர். காகங்கள் என்னும் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர். 
  • கனடா தமிழ் இலக்கியத் தோட்ட வாழ்நாள் சாதனைக்கான ‘இயல்’ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

19 February, 2024


ஆர் சூடாமணி (1931 - 2010)

  • சிறுகதை,குறுநாவல், நாவல், நாடகம் ஆகிய தலங்களில் செயல்பட்டவர்.
  • இலக்கியச் சிந்தனை விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
  • உருவாக்கிய படைபுகளில் சில

சூடாமணி கதைகள்

தனிமைத்தளிர்

இரவுச்சுடர்






19 February, 2024


திராவிடப் பெரும் ஆளுமைகள்

டி.கே.சீனிவாசன் (1922 - 1989)

 

  •  எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், அரசியல்வாதிதிராவிட இயக்கப் படைப்பாளர் என்று அறியப் பட்டவர்.
  • அறிஞர் அண்ணா மீதும் அவர் கொள்கைகள் மீதும் தீவிர பற்றுக் கொண்டவர். ‘சின்ன அண்ணா’ என்றும் ‘தத்துவ மேதை தி. கோ . சீ ‘ என்றும் மக்களால் அழைக்கப்பட்டவர். 
  • இவரது படைப்பிலக்கியம்  குடும்ப அமைப்பு , பெண்ணுரிமை , சாதி வேற்றுமை, மூட நம்பிக்கை ,தாய் மொழிப்பற்று போன்றவற்றை கருப்பொருளாக கொண்டவை.

19 February, 2024


Page 19 of 20, showing 9 record(s) out of 177 total