நாஞ்சில்-நாடன் (1947)
பிறப்பு : 31.12.1947 (கன்னியாகுமரி)
இயற்பெயர் : க. சுப்பிரமணியம்
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் செயல்பட்டுவருபவர்.
இவருடைய படைப்புகளில் எண்ணற்ற ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
தில்லிப் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகம் உள்ளிட்ட வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் இவருடைய ஆக்கங்கள் பாடத்திட்டங்களாக உள்ளன.
இலக்கியச் சிந்தனை விருது, பம்பாய் தமிழ் எழுத்தாளர் சங்க விருது, தமிழக அரசு விருது, கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
முக்கிய நூல்கள்:
- தலைகீழ் விகிதங்கள்
- எட்டுத்திக்கும் மதயானை
- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
- சூடிய பூ சூடற்க (சாகித்ய அகாடமி விருது)