ஜோடி-குரூஸ் (1963)

ஜோ.டி.குரூஸ்
(1963)
அறிமுகம்
ஜோ டி குருஸ் (பிறப்பு: 17 மே 1963) தமிழ் நெய்தல்குடிகளின் வாழ்வை இலக்கியத்தில் பதிவுசெய்த குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். திருநெல்வேலி மாவட்டம் கடற்கரை கிராமமான உவரியில் பிறந்தவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சரக்குக் கப்பல் நிறுவனங்களில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றியவர். தற்போது சென்னை இராயபுரத்தில் வணிகக் கப்பல்களுக்கான ஆலோசனை நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகிறார். இவரது இரு புதினங்களும் மீன்பிடி தொழில் புரியும் பரதவர் வாழ்க்கையைக் களமாகக் கொண்டவை.
திருநெல்வேலி புனித சவேரியார் பள்ளியில் உயர்கல்வியை முடித்தார். இடையன்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் விஞ்ஞான பாடம் படித்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலையும், திருச்சி வளனார் கல்லூரியில் ஆய்வறிஞர் பட்டமும் பெற்றவர்.
படைப்புகள்
- புலம்பல்கள் (கவிதை) -2004
- ஆழி சூழ் உலகு (நாவல்) -2004
- விடியாத பொழுதுகள் (ஆவணப்படம்) 2008
- கொற்கை (நாவல்)2009 |கொற்கை
- ஆழி சூழ் உலகு (நாவல்)
- எனது சனமே (ஆவணப்படம்) 2010
- அஸ்தினாபுரம் (நாவல்) 2016
- வேர்பிடித்த விளைநிலங்கள் (தன்வரலாறு)2017
- இனையம் துறைமுகம் (ஆவணப்படம்) 2018
- கவனம் ஈர்க்கும் கடலோரம் (கட்டுரைகள்) -2019
- திரைப்படத்துறையில் திரைப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.
விருதுகள்
- இவரது கொற்கை என்ற புதினத்திற்காக 2013ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.
- இவர் எழுதிய "ஆழி சூழ் உலகு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
- கனடா இலக்கியத் தோட்ட விருது-2006, சுஜாதா-உயிர்மை விருது-2011 (கொற்கை), லூர்தம்மாள் சைமன் இலக்கிய விருது-2013, உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.