அயோத்திதாசப் பண்டிதர் (1845 – 1914)

அயோத்திதாசப் பண்டிதர் (1845 – 1914)
அறிமுகம்
சென்னை,ஆயிரம்விளக்கு பகுதியில் 1845-ம் ஆண்டு மே மாதம் 20-ந்தேதி கந்தசாமி மற்றும் தனலட்சுமி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவர் தனது இயற்பெயரான ‘காத்தவராயன்’ என்பதை தனது குரு ’கவிராஜ வீ.அயோத்திதாசப் பண்டிதர்’ மீது கொண்ட பற்றின் காரணமாக ‘அயோத்திதாசர்’ என மாற்றிக் கொண்டார்.
தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். அயோத்திதாசன் தங்கள் குடும்ப மருத்துவர் என திரு.வி.க தன் நாட்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்/சமுதாய பணி
- 1885-ல் நண்பர் ஜான் ரத்தினத்துடன் இணைந்து 'திராவிடப் பாண்டியன்' எனும் இதழைத் தொடங்கினார்.
- 1890இல் சாதிபேதமற்ற திராவிட மகாஜன சபை என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.
- 1892-ல் நீலகிரி மாநாட்டு தீர்மானத்திலேயே அயோத்தி தாசர் இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக் கான பிரதிநிதித்துவ உரிமையையும் ஆணுக்கும், பெண்ணுக்கும் சட்டபூர்வமான சம உரிமை தேவை என்பதையும் அயோத்திதாசர் வலியுறுத்தி வந்தார்.
- தலித் மக்களைக் குறிக்க, ‘ஆதிதிராவிடர்’ எனும் சொல்லை அவர் முதன்முதலில் பயன்படுத்தினார்.
- அயோத்திதாசர் நீலகிரியில் தங்கியிருந்த 17 ஆண்டுகள் 'துளசி மாடம்', 'அத்வைதானந்த சபை' உள்ளிட்டவற்றை நிறுவி, குடில் அமைத்து மருத்துவம் பார்த்தார்.
- 1907ஆம் ஆண்டு ஜூன் மாதம், ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற இதழைத் தொடங்கினார். பின்னர் 1908இல் அவ்விதழ் ‘தமிழன்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- 1898-ல் சென்னை, ராயப்பேட்டையில் ‘தென்னிந்திய சாக்கிய பெளத்த சங்கம்’ எனும் அமைப்பை நிறுவினார்.
- கார்த்திகை தீபம், தீபாவளி, பொங்கல், திருமணச் சடங்கு, இறுதிச் சடங்கு உள்ளிட்ட சடங்குகள் எல்லாம் பவுத்தம் வசம் இருந்தவை என்றும் காலப்போக்கில், இவையெல்லாம் எப்படி இந்துமயமானது என்பதையும் விளக்கி எழுதினார்.
- 1891-இல் இரட்டைமலை சீனிவாசனுடன் இணைந்து பஞ்சமர் மகாசன சபையைத் தோற்றுவித்தார்.
- தலித் அரசியல் மற்றும் திராவிடச் சிந்தனைகளின் முன்னோடியாக கருதப்படுகிறார்.
படைப்புகள்
- விபூதி ஆராய்ச்சி, கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி, அரிச்சந்திரனின் பொய்கள், திருவள்ளுவர் வரலாறு, புத்த மார்க்க வினா விடை உள்ளிட்ட சுமார் 25 நூல்கள்⸴ 30 தொடர்கட்டுரைகள்⸴ 2 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை எனச் சில நூறு கட்டுரைகளை எழுதியுள்ளார்.
- இவர் ‘திரிக்குறள்’ என்ற பெயரில் எழுதிய திருக்குறள் உரையானது 55 அதிகாரங்களுடன், இவர் காலமான காரணத்தால் நின்று போனது.
விருதுகள்
- தமிழக அரசு, அரசு சித்த மருத்துவமனைக்கு, அவரின் நினைவாக, ‘அரசு அயோத்திதாசர் சித்த மருத்துவமனை’ எனப் பெயர் சூட்டியுள்ளது.
- கைம்பெண் மறுமணம், பெண்களுக்கு தொழில்கல்வி , இட ஒதுக்கீடு , சமஉரிமை ஆகியவற்றை கோரினபடியால் இவர் ‘தென்னிந்தியாவின் சமூக சீர்திருத்தங்களின் தந்தை’ என்று அழைக்கப்பட்டார்.
- இவரது நூல்கள் தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளது .