"தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்" வாராந்திர தொடர் நிகழ்வு-24

Posted by Anna Centenary Library on 10:40 AM
அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் #வாசகசாலை இணைந்து நடத்தும் "தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்" வாராந்திர தொடர் நிகழ்வில், இன்றைய நிகழ்வுக்கான அழைப்பிதழ்...!

பெண்களை மைய பாத்திரமாகக் கொண்டு, அவர்களின் வாழ்வை, வலிகளைப் பேசியுள்ள மூன்று கதைகள் இந்த வாரத்திற்கென தேர்வு செய்யப்பட்டுள்ளன.கதைகளுக்கான சுட்டிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அனைவரும் கதைகளை வாசித்து விட்டு, இன்றைய மாலை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அத்துடன் இந்த வார ஞாயிறு மேடையில் திரைத்துறையில் இருந்து ஒரு ஆளுமை நம்மோடு உரையாட இருக்கிறார்.

எனவே வாசக நண்பர்கள், திரைத்துறை ஆர்வலர்கள் அனைவரையும் நிகழ்வுக்கு வரவேற்கிறோம்.மகிழ்ச்சி..!

சுட்டிகள்:

பெண்களின் வாழ்கை அவலங்களை பற்றி பேசும் மூன்று கதைகள்:

கு.அழகிரிசாமியின் - இருவர் கண்ட ஒரே கனவு:
http://www.valaitamil.com/iruvar-kanda-ore-kanavu_1679.html

கு.ப.ராஜகோபாலனின் - கனகாம்பரம்:
http://www.valaitamil.com/kanagambaram_1687.html


வண்ணதாசனின் - ஒட்டுதல்:
http://azhiyasudargal.blogspot.in/2010/12/blog-post_03.html